நண்பர்களே, அரசாங்கம் PM Swanidhi Credit Card என்ற கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் தொலைபேசியிலிருந்து அதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்த கிரெடிட் கார்டை பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், அதாவது பிரதமரின் தெருவோர வியாபாரிகளின் சுயசார்பு நிதியின் கீழ் பெறலாம்.
COVID-19 தொற்றுநோய் காலத்தில், ஜூன் 1, 2020 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2025 ஆம் ஆண்டிற்கு மறுசீரமைக்கப்பட்டுள்ளது, இப்போது அது மார்ச் 31, 2030 வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்:
- PM ஸ்வாநிதி கிரெடிட் கார்டு முற்றிலும் இலவசம், திட்டத்தில் சேர கட்டணம் எதுவும் இல்லை. முக்கிய வங்கி கிரெடிட் கார்டுகளைப் போல வருடாந்திர கட்டணங்கள் எதுவும் இல்லை.
- இது UPI கிரெடிட் கார்டு என்பதால் உங்கள் Google Pay, Paytm அல்லது PhonePe உடனும் இணைத்துகொள்ளலாம், QR ஐ ஸ்கேன் செய்வதன் மூலமும் பணம் செலுத்தலாம். இது பணமில்லா மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல்களை மிகவும் எளிதாக்குகிறது.
- ஆரம்பத்தில் ₹5000 to ₹15,000 ஒரு வருட திருப்பி செலுத்தும் வகையில் 7% வருட வட்டியில் கிடைக்கும். நீங்கள் உங்கள் பில் கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்தினால் வரம்பு படிப்படியாக அதிகரிக்கிறது. இரண்டாவது முறை ₹25,000 ஐ கிடைக்கிறது, பின்னர் அது 3 வதாக ₹50,000 கிடைக்கிறது .
- இதில் உள்ள மிகப்பெரிய நன்மை Lifetime free மற்றும் சேர கட்டணம் இல்லை, வருடாந்திர கட்டணம் இல்லை, செயல்படுத்தல் கட்டணங்கள் இல்லை.
- எனவே இந்த கிரெடிட் கார்டு முற்றிலும் இலவசம். இருப்பினும், இதற்கு சில வரம்புகள் உள்ளன. ஒன்று, நீங்கள் பணத்தை எடுக்க முடியாது அதாவது நீங்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது. இரண்டாவதாக, சர்வதேச பரிவர்த்தனைகள் இல்லை எனவே இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த மற்றும் உபயோகிக்க முடியும், எனவே, இந்த அட்டை வணிகம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு சிறந்தது.
எப்படி அப்ளை செய்வது:
நீங்கள் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அப்ளை செய்யலாம் அல்லது இத வங்கியிலும் இந்த திட்டத்தில் அப்ளை செய்யலாம் மற்றும் சமர்ப்பித்த எந்தவொரு விண்ணப்பத்தின் நிலையையும் அங்கேயே சரிபார்க்கலாம்.
அப்ளை செய்யும் முன் தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்களை என்னவென்று தெரிந்த கொள்ளவேண்டும்.
விற்பனைச் சான்றிதழ்:
நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால், உங்களிடம் ஒரு சான்றிதழ் இருக்கும். அதை தயாராக வைத்திருங்கள். மொபைல் எண்ணை வைத்து எளிதாக அப்ளை செய்து கொள்ளலாம்.
அப்ரூவல் கிடைத்ததும் கிரெடிட் கார்டு கூரியர் மூலம் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் கார்டு கிடைத்த 60 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.
முக்கியமான நன்மைகள் என்ன?
- உத்தரவாதம் அளிப்பவர் தேவையில்லை. நீங்கள் எந்த சொத்தையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை.இரண்டாவதாக, அவை வட்டி இல்லாதவை.
- அதாவது நீங்கள் உங்கள் பில்லை சரியான நேரத்தில் செலுத்தினால், 20 முதல் 50 நாட்கள் வரை வட்டி இல்லாத காலம் கிடைக்கும்.
- நீங்கள் உங்கள் பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- இதன் மூலம் உங்களின் கிரெடிட் லிமிடை அதிகரிக்கலாம் மற்றும் கிரெடிட் மதிப்பையும் உயர்த்தலாம் இவ்வாரு தொடர்ந்து பணம் செலுத்தினால், உங்கள் CIBIL மதிப்பெண் வலுவடைந்து, எதிர்காலத்தில் பெரிய கடன்களைப் பெற உதவும்.
- மூலப்பொருட்கள் வாங்க ,வாடகை செலுத்த, சிறிய செலவுகள் அனைத்தயும் இந்த அட்டையைப் பயன்படுத்தி நிர்வகிக்கலாம்
- மேலும் சில வங்கிகள் Reward points ஐயும் வழங்குகின்றன, மற்றும் கேஷ்பேக்கையும் வழங்குகின்றன. எனவே, கூடுதல் சேமிப்பு கிடைக்கும்.
- பயன்படுத்திய தொகையை தவணைகளாக மாற்றலாம். மேலும் தகவலுக்கு PM SVIDHI.moh.gov.in ஐப் பார்வையிடவும்.











Leave a Reply